For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகைக் கடையில் பெண்கள் கைவரிசை

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

திருப்பூரில் பட்டப் பகலில் நூதன முறையில் நகைக்கடையில் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மூன்று பெண்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

திருப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு மாருதிக் காரில் மூன்று பெண்கள் வந்தனர். இந்தப் பெண்கள் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு நகைக் கடைமுன்பு மாருதிக்காரை நிறுத்தினர்.

பின்னர், அதில் இருந்த இரண்டு பெண்கள் இறங்கி கடைக்குள் சென்றனர். ஒரு பெண் மட்டும் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.

கடைக்குள் சென்ற இரண்டு பெண்களும் தலா 5 பவுன் எடையுள்ள நெக்லஸ் போன்ற நகைகள் 5 எடுத்துக் கொண்டனர்.

அந்த நகைகளை காரில் உள்ள தனது தோழியிடம் காண்பிக்க வேண்டும் எனக் கூறினர். கடை உரிமையாளர் ஒரு கடையில் வேலை பார்க்கும் பையனை உடன்அனுப்பியுள்ளார்.

அப்போது வெளியில் நோட்டமிட்டவாறே பெண்கள் வரும் இருந்தனர். பின்னர் தக்க சமயம் பார்த்து கடை பையனைக் கீழே தள்ளி விட்டு விட்டு காரைக்கிளப்பிச் சென்று விட்டனர்.

இதனால் கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்து உடனடியாகப் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X