வீரப்பனை சந்திக்கச் சென்ற 23 பேர் கைது
மதுரை:
வீரப்பனைப் சந்திப்பதற்காக சத்தியமங்கலம், பவானி வழியாக காட்டுக்குள் நுழைய முயன்ற நேதாஜி தேசிய இளைஞர் பேரவை தலைவர் சுரேந்திரன்உள்பட 23 பேரைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
நேதாஜி தேசிய இளைஞர் பேரவை தலைவர் சுரேந்திரன் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் நாட்டின் பிரிவினை வாதத்தைத் தூண்டி விட நினைக்கிறார்கள். இதை நேதாஜி பேரவை ஒருபோதும் அனுமதிக்காது.
வீரப்பன் தமிழ்த் தீவிரவாதிகளுடன், வைத்திருக்கும் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். வீரப்பனின் நிபந்தனைகளை ஏற்று அவரைச் சந்திக்க, தமிழ்த்தீவிரவாதிகளின் ஆதரவாளர்களை தமிழக அரசு தூதர்களாக அனுப்பியுள்ளது. இதன்மூலம் தமிழக அரசு வீரப்பனின் நிபந்தனைகளை ஆதரித்து வருகிறதுஎன்றே கூறலாம்.
அரசுத்தூதர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வெறும் நாடகமே என்றார் சுரேந்திரன்.












Click it and Unblock the Notifications