வன்முறையை நிறுத்த பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்:

வன்முறையை நிறுத்தினால் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அளிக்கப்படும் என இஸ்ரல்ே பிரதமர் எகுத்பராக் கூறியுள்ளார்.

பாலஸ்தீனியர்கள் வன்முறையை கைவிட்டால் மட்டுமே அவர்களுக்கு தனி நாடு கொடுக்க முடியும். ஆனாலும்பேச்சு வார்த்தை மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

வன்முறை நிறுத்தப்பட்டால் தான் பேச்சு வார்த்தையையும் துவங்க முடியும் என அவர் இஸ்ரேல்-பாலஸ்தீனபிரச்சினை குறித்து உலக நாடுகளின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கருத்தை கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியருக்கும் இடையேயான மோதல் செப்டம்பர் மாதம் 28-ம் தேதிதொடங்கியது.இதில் 170 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்பாலஸ்தீனியர்கள்.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் பதற்றம்தொடர்ந்து வருகிறது. செவ்வாய் கிழமையன்றும் பதட்டம் தொடர்ந்தது. பகலில் நடந்த தாக்குதலில் ஒருபாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். 50 பேர் காயமைடந்தனர் இரவு முழுவதும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இஸ்ரேலிய ராணுவ நிலைகள், கிழக்கு ஜெருசலேமில் யூதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் கிலோ,மேலக்கரையிலுள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி பாலஸ்தீனியர்கள் சுட்டனர்.இஸ்ரேல் ராணுவத்தால் பதில்தாக்குதல் நடத்தப்பட்டது.

யூதர் ஒருவர் மேலக்கரையில் 7 வயது பாலஸ்தீன சிறுவன் மீது கார் ஏற்றி கொன்றதாக பாலஸ்தீன் தரப்பில்கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் போலீஸ் விசாரித்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலஸ்தீன சிறுவர்கள் மோதுவதை தடுக்க இருப்பதாக பாலஸ்தீனிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+