வீரப்பன் விவகாரம்: கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம்
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைநகர் பெங்களூரில் வெள்ளிக்கிமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.இக்கூட்டத்தில் ராஜ்குமார்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.
ஐக்கிய ஜனதாக் கட்சித் தலைவர் சிந்தியா, எதிர்க்கட்சித் தலைவர் ஜகதீஷ் ஷெட்டர் ஆகியோர் வியாழக்கிழமை சட்டசபையில் ராஜ்குமார் விவகாரம்குறித்து விவாதிக்கும் வகையில் எப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும் என்று கேள்வி எழுப்பினர்.
ராஜ்குமார் கடத்தல் பிரச்சனையில் அரசுத் தூதர் நெடுமாறன், அரசியல் பிரச்சனையால் காட்டிற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் அரசின்அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும். அப்போதுஅரசுத் தரப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications