பிகார்: 5 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் படுகொலை

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் பின்சா கிராமத்தில் 5 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பலால்படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல், பின்சா கிராமத்தில், தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில் 5 தலித்துக்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

கொலை செய்யப்பட்ட அனைவரும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் யாரால்? எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்கள்என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் பிரபாத் குமார் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+