தொடங்கியது சுவர்ண பூமி திட்டம்: ஜஸ்வந்த் சிங் பங்கேற்றார்

Subscribe to Oneindia Tamil

வியன்டைன்:

இந்தியாவிற்கும் 5 தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குமிடையே புதிய சரித்திரத்தை துவக்க இருக்கும் கங்கா -மெகாங்க் சுவர்ணபூமி திட்டம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் முன்னிலையிலும், மேலும் இதில் பங்குபெற்றுள்ள அயல் நாட்டு சுற்றுலா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையிலும்வெள்ளிக்கிழமையன்று துவங்கியது.

இந்த விழாவில் கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்தஅமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

லாவோ பிளாசா ஹோட்டலில் நடந்த துவக்க விழாவில் ஜஸ்வந்த் சிங் பேசுகையில் இந்தியாவிற்கும் கங்கா--மெகாங்க் பகுதியில் உள்ள நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கலாச்சார உறவுகளை நினைவு கூர்ந்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

விழாவில் பங்கேற்றுள்ள நாடுகள் இயற்கை வளத்தில் சிறந்து விளங்குகின்றன. இந்த நாடுகள் அனைத்தும்ஒன்றிணைந்தால் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கல்வித்துறையில் சிறந்த முன்னேற்றம் காணலாம். தகவல் தொடர்புதுறையிலும் வளர்ச்சி பெறலாம். மேலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணலாம்.

இந்தியா இந்த புதிய அமைப்பில் பங்கெடுப்பது குறித்து ஜஸ்வந்த் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். தென் கிழக்கு ஆசியநாடுகளுடன் இந்தியா நட்புறவு கொண்டிருப்பது இந்தியாவின் அயல்நாட்டு கொள்கையின் சிறப்பைஎடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது.

ஏசியான் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இந்தியா இணைந்தது மெகாங்க் திட்டத்தின் மேம்பாட்டிற்கு உதவும் எனஉறுதி அளிக்கிறேன். ங்கா - மெகாங்க திட்டத்தை எதிர்கால வளர்சிக்காக அர்ப்பணிக்கிறேன் என்றார்.

அமைச்சர்கள் அனைவரும் இரண்டு சுற்று பேச்சு வார்த்தை நடத்தியபின் வெள்ளிக்கிழமை மாலை வியன்டைன்உறுதி மொழி குறித்து கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+