பிஜித் தீவில் 18 மாதங்களுக்குள் தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
லண்டன்:
பிஜித் தீவில் அடுத்த 18 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்காலப் பிரதமர் லைசேனியா குவாரசே வெள்ளிக்கிழமைதெரிவித்தார்.
பிரதமர் லைசேனியா குவாரசே இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி:
பிஜித் தீவில் தற்போது இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. டிசம்பர் 2001 க்குள் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
பின்னர் 2002 ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தல் மார்ச் அல்லது ஜூன் மாதம் நடக்கும்.
புதிய அரசியலமைப்புச் சட்டம், பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்களும், இங்கு வாழும் இந்தியர்களும் பயன்பெறும் வகையில் இருக்கும். இங்கு இந்தியர் ஒருவர்பிரதமராக இருப்பதை பூர்வீக குடிமக்கள் யாரும் விரும்பவில்லை.
புதிய அரசியலமைப்புச் சட்டப்படி, பிஜியில் பூர்வீக குடிமக்களே பிரதமர் பதவியிலும், அதிபர் பதவியிலும் அங்கம் வகிப்பார்கள் என்று தனது பேட்டியில்குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாகப், பிஜி தீவில் ஆட்சி நடத்த இந்தியப் பிரதமர் மகேந்திர செளத்திரியை, கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் சிறைவைத்தார். அவரதுஅமைச்சரவை சகாக்களும் சிறை வைக்கப்பட்டனர்.
ராணுவத்துக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்குப்பின் பிரதமர் மகேந்திர செளத்ரி விடுவிக்கப்பட்டார். பின்னர் ஜார்ஜ் ஸ்பைட்கைது செய்யப்பட்டார். அவர் மேல் தேச விரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போது பிஜித்தீவில் இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறதுஎன்பது நினைவிருக்கலாம்.