14 ம் தேதி அதிமுக போராட்டம்...ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சர் முல்லை வேந்தனை கைது செய்யக்கோரி 14-ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலகம் முன்பு அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமும், ஆர்பாட்டமும் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்புவிடுத்துள்ளார்.

இது குறிதத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. வை எதிர்த்து தி.மு.க.வினர் நடத்திய கண்டன பொதுக் கூட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன்என்னைக் குறித்தும், அ.தி.மு.க. வைக் குறித்தும் அவதூறாக பேசினார்.

இதைக் கண்டித்த அ.தி.மு.க. மகளிர் அணியின் காவேரி, சத்யவாணி மற்றும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்த பழனிமுருகன் ஆகியோரை முல்லைவேந்தன்மேடையிலிருந்து இறங்கி வந்து தாக்கியிருக்கிறார்.உடைகளையும் கிழித்துள்ளார்.

இந்த சம்பவத்தை போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சரை கைது செய்க்ககோரி அ.தி.மு.க. சாப்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு 14-ம்தேதி போராட்டம் நடத்தப்படும்

அதிமுக மகளிர் அணி சார்பில் அணித்தலைவர் சுலோசனா தலைமையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டமும், கட்சியின் அமைப்புச்செயலாளர் முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+