ஜெருசலேம்: குண்டுவெடிப்பில் போலீஸ்காரர் காயம்
ஜெருசலேம்:
ஜெருசலேம் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ளது ஜெருசலேம். புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இரு நாட்டுராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
கடந்த ஆறு வாரமாக நடந்த மோதலில் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாலஸ்தீனியர்கள்.
கடந்த வாரம் ஜெருசலேம் பகுதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications