அமர்நாத் யாத்திரிகள் கொலைச் சம்பவத்தில் 5 பேர் கைது
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர்போலீஸாரால் வியாழக்கிழமைகைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் லஸ்கார்- ஈ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்என்று தெரிகிறது.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், லக்ஷார் - இ- தொய்பா என்றமுஸ்லிம் அமைப்புதான் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு போலீசார், முஸ்லிம்கள் வாழும் பல பகுதிகளை சோதனையிட்டு 5 தீவிரவாதிகளை கைதுசெய்துள்ளனர்.இவர்கள் அமர்நாத் யாத்ரீகர்களை ஹரி சிங் உயர்நிலைப் பள்ளிக்கு அருகே ஆகஸ்ட் 1-ம் தேதிதாக்கிய சதியில் ஈடுபட்டவர்கள்.
அபித் என்ற தீவிரவாதி யாத்ரீகர்கள் மீது கை எறிகுண்டை வீசினார். ஆனால் அது வெடிக்கத் தவறியது. அவன்துப்பாக்கியால் சுட முயலும் போது அவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தற்போது இரண்டு சீக்கிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
பாலகாமில் 35 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதற்கும், சீக்கியத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்பதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications