மாறன் உடல்நிலை முன்னேற்றம்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலையில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் டாக்டர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மாறனின் உடல்நிலையைப் பரிசோதனை செய்வதற்காக லண்டன் மருத்துவமனையில் பணிபுரியம் ஜெர்மன் டாக்டர் ஹார்ஸ்ட் கோன் சென்னை வந்தார். அவர்வெள்ளிக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பிரதீப் ரெட்டியுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் மாறனைப் பரிசோதித்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாறனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார்.இன்னும் ஒரு வாரத்தில் அவர் குணமாகி விடலாம் என்று நம்பலாம்.
அவருடைய இருதய தசையை மென்மைப் படுத்துவதற்காக, ரூ 66 ஆயிரம் செலவழித்து, செப்ட்ரல் அபலேஷன் என்ற ஊசி மருந்து அவரது உடலில்செலுத்தப்பட்டுள்ளது.
நவீன மருத்துவதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாறனை 90 சதவீதம் குணப்படுத்தி விடலாம் என்று நம்புகிறோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications