புதிய நெருக்கடியில் பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

1985 ம் ஆண்டில் குஜராத்தில் போலீஸ் காரர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான, இணை அமைச்சர் ஹரின் பதாக் கூட்டணியில் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதால் பாரதிய ஜனதாக் கட்சி புதிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் வாஜ்பாய் இவ்விஷயம் குறித்து உள்துறை அமைச்சர் அத்வானியிடம் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிகிறது.

1985 ம் ஆண்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வேலைவாய்ப்பில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு குறித்து ஒரு குழு தர்ணா நடத்திக் கொண்டிருந்தது.அப்போது அந்த தர்ணா திடீரென்று வன்முறையாக வெடித்தது. இச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இக்கொலைச் சம்பவத்தில், பாரதிய ஜனதா கட்சியிலுள்ள இணை அமைச்சர் ஹரின் பதாக் மற்றும் குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் பட்ஆகிய இருவரும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் பிரமுகர் நரேந்திர மோதி கூறுகையில், இதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை. இது அரசியல்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்றார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 20 ம் தேதி நடக்கிறது. அப்போது பதாக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூட்டணிக் கட்சித்தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்புக்குரல் எழுப்பலாம் என்று தெரிகிறது.

மேலும், ஊழல் வழக்கில் தொடர்புடைய முத்தய்யா, பூட்டாசிங் ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்தனர். இதே போல் போலீஸ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட ஒருவர் அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+