தேர்தலில் ஜெ.போட்டியிட முடியுமா? ...அதிகாரி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்பதை தேர்தல் அதிகாரி சட்டத்திற்கு உட்பட்டுதீர்மானிப்பார் என்று தலைமை தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்தேர்தலில் போட்டியிட முடியுமா?

பதில்: தேர்தல் நேரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார்.

கேள்வி: தேர்தலுக்குள் வாக்களர்களுக்கு 100 சதவிகிதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடுமா?

பதில்: அந்த நிலையை ஏற்படுத்த நாங்கள் பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதே?

பதில்: தேர்தல் சீர்திருத்தம் குறித்து இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில் தேர்தல்ஆணையம் தான் தேர்தலை நடத்துகிறது. மறுவாக்குப் பதிவு தேவைப் பட்டால் தேர்தல் ஆணையம் தான் அதுபற்றிமுடிவு செய்கிறது.

ஆனால், அமெரிக்காவில் தேர்தலை நடத்துவதற்கு அத்தகைய அமைப்பு இல்லை. 200 ஆண்டுகளுக்கு முன்புகடை பிடிக்கப்பட்ட அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான தேர்தல் நடைமுறையில் உள்ளன.

மேலும் அங்குள்ள வாக்காளர்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. எலக்டோரல் காலேஜ் முலம் அந்நாட்டுஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் கில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+