அமாவாசையின் காதல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இரண்டு பெண்களை ஏமாற்றி விட்டு மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற அமாவாசையை சினிமா ஸ்டைலில் போலீஸார் மணமேடையில் வைத்து கைதுசெய்தனர்.

திருச்சி காட்டுப்புத்தூர் அருகே கொடுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமாவசை (31). கூலித் தொழிலாளி. இவருக்கும் முறைப் பெண் சரசுவுக்கும் 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், ஊர் பஞ்சாயத்தை கூட்டி பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் கல் உடைக்கும் வேலைக்காக சேலம் கொண்டலாம் பட்டிக்கு வந்தார் அமாவாசை. அப்பகுதியை சேர்ந்த மாது என்ற பெண்ணைசந்தித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஏற்கனவே திருமணம் ஆகிய தகவலை மறைத்து விட்டு, அப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாண்டுகளுக்கு பின்னர் அமாவாசைக்கும் மாதுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மாதுவை அம்போவென விட்டு விட்டுமீண்டும் திருச்சிக்கு சென்று விட்டார் அமாவாசை.

அங்கே சும்மா இருக்கவில்லை. மணச்சநல்லூரை சேர்ந்த காபித்தூள் வியாபாரியின் மகள் லட்சுமிக்கு காதல் வலை விரித்தார். அவரிடமும் தான்திருமணமாகாத இளைஞர் என்று பொய் சொன்னதால் அவரை நம்பினார் லட்சுமி.

பின்னர் பெற்றோர் சம்மத்ததுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை மணச்சநல்லூரில் உள்ள கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது.

இதற்கிடையில் இந்த தகவல் சேலத்தில் இருந்த இரண்டாவது மனைவி மாதுவுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக சேலத்தில் இருந்து கிளம்பி வந்தார்.மணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் மாதுவுடன் சென்றனர். திருமண கோலத்தில் தாலி கட்ட தயாராக இருந்த அமாவாசையை கைது செய்தனர். உண்மையை அறிந்தலட்சுமி மாதுவுக்கு நன்றி தெரிவித்தார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+