தாக்கியவருடன் கைகுலுக்கிய எம்.எல்.ஏ.
கோவை:
கோவை கோர்ட் வளாகத்தில் தன்னைத் தாக்கியவருடன் எம்.எல்.ஏ.கைகுலுக்கினார்.
கோவையில் கடந்த 1977 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந் தேதி இரவு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள்செல்வராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.சி.டி.தண்டபாணி தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், அதிரடி ஆனந்தன் உள்பட 10 பேரைக்கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை 3 வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. எம்.எல்.ஏ.சி.டி.தண்டபாணி கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்.
பின்னர் விசாரணை முடிந்து வெளியே வந்ததும் அவர், தன்னைத் தாக்கிய அர்ஜூன் சம்பத்துடன் கை குலுக்கினார். இந்தச் சம்பவம் கோவை கோர்ட்வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications