இந்தியா அணு குண்டு வெடித்தது ஏன்?- புதிய தகவல்கள்
டெல்லி:
பாகிஸ்தானிடமிருந்து போர் மிரட்டல் இருந்ததால் தான் அணு குண்டு சோதனை நடத்தினோம் என இந்தியா இப்போதுகூறியுள்ளது.
1998ல் இந்தியா நடத்தி அணு குண்டு சோதனைக்கு உள்நாட்டில் பெரும் வரவேற்பும் வெளிநாடுகளில் கடும கண்டனமும்எழுந்தது. இந்தியா நடத்த அணு குண்டு சோதனைகளை ஒட்டி பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை நடத்தியது.
இந் நிலையில் இந்தியா ஏன் திடீரென் அணு குண்டு வெடித்தது என்பதற்கான விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தியபாதுகாப்பு ஆலோசகரான பிரிஜேஷ் மிஸ்ரா ஸ்டார் நியூஸ் சேனலில் அளித்த பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது. பேட்டி விவரம்:
1998ம் ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் காவ்ரி ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு இந்தியா பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் இருந்தது. பாகிஸ்தானின் அச்சுருத்தலை தர்க்கத் தான் அணு குண்டு வெடித்தோம்.
பதவி ஏற்ற இரண்டு வாரத்தில் இந்தியாவின் அணு குண்டுத் திட்டம் குறித்து பிரதமர் வாஜ்பாய் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார். ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால், ஏப்ரலில் காவ்ரி ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்தது.அவர்களின் பேச்சும் செயலும் போருக்கு ஆயத்தம் செய்வதை உறுதி செய்தது.
அப்போது தான் அணு குண்டு சோதனை நடத்த பிரதமர் உத்தரவிட்டார். அணு குண்டு இல்லாமல் இன்றைய உலகில் நம்மையாருமே கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.
அணு ஆயுதப் பரவல் சட்டம் ஒருதலைப்பட்சமானது. இதில் கையெழுத்திட்டால், உலகின் 5 வல்லரசுகள் மட்டுமே அணு ஆயுதம்வைத்திருக்கும் நிலை உருவாகும். நாமெல்லாம் அணு ஆயுதங்கள் இல்லாத ஒதுக்கப்பட்ட நாடுகள் வரிசையில் உட்காரவேண்டியிருக்கும். இதனால், தான் இதில் கையெழுத்திட இந்தியா தயாராக இல்லை.
கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியது குறித்து ஆராய்ந்த கே. சுப்பிரமணியம் சமர்பித்த அறிக்கையை அமைச்சர்கள் குழுஆராயந்து வருகிறது. நாட்டிற்கு ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இருக்க வேண்டும் என சுப்பிரமணியம் கமிட்டிபரிந்துரைத்துள்ளது.
அணு குண்டு சோதனையின் ஒவ்வொரு கட்டமும் என்னிடம் விளக்கப்பட்டது என்றார் மிஸ்ரா.
வட கொரியாவின் உதவியோடு காவ்ரி ஏவுகணையைத் தயாரித்து சோதனை செய்த பாகிஸ்தான், இதைக் கொண்டு இந்தியாவின்பல நகரங்களைத் தாக்க முடியும் எனக் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.