ரூ. 10 லட்சம் மது பறிமுதல் .. 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் அதிக தொகையிலான மது பிடிபடுவது இதுவே முதல் முறையாகும். நகர போலீஸின் தனிப் படை இந்த கள்ளமதுவைப் பறிமுதல் செய்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மது அடங்கிய 2000-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கைப்பறறப்பட்டன.
துணை போலீஸ் கமிஷனர் ஷகீல் அக்தர் தலைமையிலான தனிப் படை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், செல்வம்,ஜோசப், மற்றொரு செல்வம் ஆகியோர் அடங்கிய கும்பல் பிடிபட்டது. இவர்களிடமிருந்து ஷீவாஸ் ரீகல், ஜானி வாக்கர்,வில்லியம் கிரான்ட், பிரஞ்ச் சாம்பய்ன் ஆகியவை அடங்கிய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் இவற்றை விற்க முயன்றபோது இக்கும்பல் பிடிபட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications