உலக செஸ் போட்டி .. டெல்லியில் 26-ல் துவங்குகிறது
இஸ்தான்புல்:
விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 4 இந்திய கிரான்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் உலக செஸ் சாம்பியன் போட்டி டெல்லியில்நவம்பர் 26-ம் தேதி துவங்குகிறது.
ஆனந்த் தவிர, கிரான்ட் மாஸ்டர்கள் சசிகிரன், அபிஜித் குந்தே, திபயந்து பரூவா ஆகியோரும் இந்தியாவின் சார்பில் இந்தப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
ஆனந்த்திற்கு இந்தப் போட்டியில் அதிக பட்ச இலோ புள்ளிகள் (2762) தரப்பட்டுள்ளன. அவருக்கு அடுத்து ரஷியாவின்அலெக்சாண்டர் மிரசோவிச் (2756), இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் (2755) ஆகியோர் உள்ளனர்.
சசிகிரனுக்கு 2573 புள்ளிகளும், குந்தேவுக்கு 2556 புள்ளிகளும், பரூவாவிற்கு 2502 புள்ளிகளும் தரப்பட்டுள்ளன.
சீன மகளிர் சாம்பியன் ஷூ ஜூன் ஆடவர் பிரிவிலும் போட்டியில் கலந்து கொள்கிறார். இவர்கள் தவிர இஸ்ரேல் கிரான்ட் மாஸ்டர்போரிஸ் ஜெல்பான்ட், இங்கிலாந்தின் நிகல் ஷார்ட், ரஷியாவின் பீட்டர் ஸ்வைல்டர், உக்ரைனின் வாசிலி இவானிசுக் ஆகியோரும்களத்தில் உள்ளனர்.
செஸ் போட்டி தரப்பட்டியலில், ஆடவர் பிரிவில் 100 கிரான்ட் மாஸ்டர்களும், பெண்கள் பிரிவில் 61 கிரான்ட் மாஸ்டர்களும்உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications