ராஜ்குமாருக்காக சபரிமலைக்கு பாத யாத்திரை
பெங்களூர்:
கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டி பெங்களூரிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும்ஐயப்ப பக்தர்கள் பூஜையில் நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கலந்து கொண்டார்.
சிவாஜிநகர் வீனஸ் செக்யூரிட்டி காலனியில் வசித்து வருபவர் துளசிதாஸ் (45). இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டநடிகர் ராஜ் குமார் நலமுடன் திரும்ப பெங்களூரிலிருந்து சபரி மலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார். இதுதொடர்பாக இவர்நடத்திய ஐயப்ப பூஜையில் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார், ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
துளசிதாசுடன் அவரது மகன் பரத்தும், நண்பர் யோகேஷும் இருமுடி சுமந்து பாதயாத்திரையாக சபரி மலை புறப்பட்டுச்சென்றனர்.
ஒசூர், ராயக்கோட்டை, பாலக்கோடு, தொப்பூர், சேலம், திருச்சி, திண்டுக்கல், கமுதி, வண்டிப்பெரியார், பீர்மேடு, எரிமலை,பம்பை வழியாக சபரி மலை சன்னிதி செல்வார்கள்.
இதுகுறித்து துளசிதாஸ் கூறுகையில், நான் முன்பு சைக்கிள் மூலம் சபரிமலை சென்றுள்ளேன். இப்போது என் நண்பர்யோகேஷுடனும். என் 10 வயது மகனுடனும் கால் நடையாக செல்கிறேன்.ராஜ்குமார் நலமுடன் திரும்புவதற்காக இந்தபிரார்த்தனை. நாங்கள் சபரிமலை சென்றடைய 25 நாட்கள் ஆகலாம்.
வழியில் உள்ள திருந்தலங்களில் பூஜைகள் செய்வோம். திருச்சி சமயபுரத்தில் சிறப்பு அர்ச்சனை செய்வோம். இரவு எங்குதங்குவோம் என தெரியாது. ஆண்டவன் எங்கு தங்குவது என்பதை முடிவு செய்வார் என்றார். இவர்களுடன் துணி மற்றும்பொருட்களுடன் மூன்று சக்கர ரிக்ஷாவும் செல்கிறது.












Click it and Unblock the Notifications