வாலிபரை சித்ரவதை செய்த ஐ.ஏ.எஸ். அகிகாரி முன் ஜாமீன் கேட்டுமனு
சிவகங்கை:
தன் மகளை காதலித்ததற்காக, காதலித்தவரை மொட்டையடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 6 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைவாணன் மகள், சிவகங்கைக்கு அருகிலுள்ள குருந்தன்குளத்தைச் சேர்ந்த வீரணன் மகன் டிரைவர் முருகன்என்பவரை காதலித்தார். இந்த விவகாரம் கலைவாணனுக்கு தெரிய வந்தது.
அவர் முருகனை காரில் கடத்திச் சென்று அவருக்கு மொட்டை அடித்து,புருவத்தை மழித்து சேது படத்தில் வருவது போல் ஏர்வாடியில்உள்ள மனநோய் காப்பகத்தில் அடைத்து சித்தரவதை செய்ததாக கலைவாணன் மீது புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கலைவானின் சித்தப்பாவின் மகன் போஸ். சவர தொழிலாளி கண்ணன். கார் டிரைவர் செந்தில் குமார் ஆகியோரைபோலீசார் கைது செய்தனர்.
தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைவாணன், ராமநாதபுரம் மாவட்ட மறுவாழ்வு துறை அலுவலர் ராமகிருஷ்ணன். போஸின் மகன் பூரணமாராமச்சந்திரன்,தாஸ், ராஜேந்திரன், பாண்டியராஜன் ஆகிய 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications