அரசியல் சட்டத் திருத்தம் .. மீண்டும் களம் இறங்குகிறார் சந்திரிகா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் புதிய அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தீவிரமாகஉள்ளது.

புத்தமதத் தலைவர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களையும் கலந்து ஆலோசித்த பின் மூன்று மாத காலத்திற்குள் புதியஅரசியல் அமைப்புச் சட்டத்தை அமல் படுத்துவதில் சந்திரிகா தீவிரமாக உள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்பு இது குறித்த விவரங்கள் விடுதப்ை புலிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்கொண்டுபேச்சு வார்த்தைகள் குறித்த விவரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நார்வே குழுவினருடன் பேசிய பின்பு முடிவுசெய்பப்படும்.

அதிபர் சந்திரிகாவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருப்பதை பலஅமைச்சர்களும் வரவேற்றிருக்கின்றனர்

போலீஸ், நீதித்துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தேர்தல்களுக்கென தனித்தனி சுதந்திரமாக செயல்படக்கூடிய கமிஷன்கள்அமைக்கப்பட வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

புதிய அரசியல் திருத்தச் சட்டம், கடந்த ஆண்டே அமல்படுத்தப்பட இருந்தது.ஆனால் அதற்கு நாடாளுமன்றத்திலும்,வெளியிலும் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.

வெள்ளிக்கிழமை நடந்த தனது கட்சியான இலங்கை சுதந்திராக் கட்சிக் கூட்டத்தில், கட்சித் தலைவராக மீண்டும் சந்திரிகா தேர்வுசெய்யப்பட்டார். அதன் பின் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து சந்திரிகாவிளக்கினார்.

புதிய அரசியல் சட்டத்திருத்தத்தை அமல் படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். ஆனால்225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 116 எம்.பி.க்களே உ ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+