3 நாட்களில் தேறுவார் மாறன் .. அப்பல்லோ கூறுகிறது
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், மைக்ரேன் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய தொழில்துறைஅமைச்சர் முரசொலி மாறன் இன்னும் 2-3 நாட்களில் குணமடைவார் என்று மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டிகூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாறன் நிலை இன்னும் 3 நாட்களில் மேம்படையும். அவருக்கு என்ன சிகிச்சை முறைகள்தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குன் மற்றும்மருத்துவக் குழு மாறனுக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றார்.
இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் மாறன் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக பிரதமரின் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ராமற்றும் பிரதமரின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனை வந்திருந்தனர்.
மாறன் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டுவருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications