ரஷிய விமானம் கடத்தப்பட்டது
ஜெருசேலம்:
ரஷியாவைச் சேர்ந்த பயணிகள் விமானம் கடத்தப்பட்டு, இஸ்ரேலில் தரையிறக்கப்பட்டது.
மாஸ்கோவிலிருந்து, ரஷியாவின் தாஜஸ்தான் மாநில தலைநகர் மகாசக்லா என்ற நகருக்குப் பறந்து சென்று கொண்டிருந்தபோதுகடத்தப்பட்டது. கடத்தப்பட்ட அந்த விமானம் பின்னர் இஸ்ரேல் நாட்டின் ராணுவ விமான நிலையம் ஒன்றில்தரையிறக்கப்பட்டது.
தற்போது விமானம் தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப் படைத் தளம் ஒன்றில் நிறுத்ததப்பட்டுள்ளது. இதற்கிடையே,கடத்தப்பட்ட விமானத்திலிருந்து 8 பயணிகள் வெளியே வந்துள்ளதாக இஸ்ரேல் ரேடியோவில் தெரிவிக்கப்பட்டது.
ராணுவ விமான நிலைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 8 பேரும் விமான பயணிகளாக இருக்கும் என்றுசந்கிேக்கிறோம். இவர்கள் விமானத்திலிருந்து வெளியேறியதை யாரும் தடுக்கவில்லை என்றார்.
மேலும், விமானத்தில் ஒரு கடத்தல்காரர் மட்டுமே இருக்க முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுநடத்துவதற்காக அந்தக் கடத்தல்காரர், விமானத்தை விட்டு வெளியேரியுள்ளார். அவரிடம் கைத் துப்பாக்கிகள் ஆகியவைஇருந்தன.
கடத்தல்காரர் என்ற விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications