ஈராக் மீது குண்டுவீச்சு: 4 பள்ளிச் சிறுவர்கள் காயம்
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத் மீது அமெரிக்க, இங்கிலாந்து போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 4பள்ளிச் சிறுவர்கள் உள்பட 7 பேர் காயமடைந்ததாக ஈராக் கூறியுள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பேர் ஆசிரியர்கள். 1991-ம் ஆண்டு நடந்த வளைகுடாப் போருக்குப் பிறகு ஈராக் மீது பலதடைகளை ஐ.நா. சபை விதித்தது. அதில் ஒன்று, சில பகுதிகள் மீது விமானங்கள் பறக்கக் கூடாது என்பது. அந்தப்பகுதிகளை அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் படைகள் கண்காணித்துவருகின்றன.
இந்த நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள பஸ்ரா மாகாணத்தில், ஹமாய்தி கிராம் மீது சனிக்கிழமை பிற்பகல்அமெரிக்க, இங்கிலாந்து போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக ஈராக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மொத்தம் நான்கு ஏவுகனைகள் வீசப்பட்டதாகவும் அது தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலில் 3 ஆசிரியர்கள், 4 மாணவர்கள் காயமுற்றனர். மேலும், பல வீடுகள், கட்டடங்கள், ஒரு கார்ஆகியவை சேதமுற்றதாகவும் ஈராக் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications