காங். தலைவர் தேர்தல்: லக்னோவில் வாக்களித்தார் சோனியா

Subscribe to Oneindia Tamil

லக்னோ (உ..பி.):

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்தியா முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லக்னோவில் வாக்களித்தார். சோனியாவை எதிர்த்து உத்திரப் பிரதேச முன்னாள் காங்கிரஸ்தவைர் ஜிதேந்திர பிரசாதா போட்டியிடுகிறார்.

ஜிதேந்திர பிரசாதா தனக்கு பலம் சேர்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்கனாக உ.பி.யிலேயே தங்கியிருக்கிறார். திடீரென சோனியாகாந்தி உ.பி. வருவதென சனிக்கிழமை மாலை முடிவெடுத்தது அறிந்து ஜிதேந்திர பிராசாதா குழுவினர் ஆச்சரியமடைந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை காலை சோனியா காந்தி நேரு பவனில் வாக்களித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சோனியா காந்திஜிந்தாபாத் என கோஷமெழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

வாக்களித்த பின்னர், சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், தொண்டர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவேநான் வெற்றி பெறுவேன் என்றார்.

காங்கிரஸ் தேர்தல் அதிகாரி ராம் நிவாஸ் மிர்தா வாக்காளர் பட்டியலில் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியிருப்பது பற்றிசோனியாவிடம் நிருபர்கள் கேட்ட போது, தேர்தல் பணி மிகப் பெரிய பணி இதில் சில முரண்பாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது. ஆனாலும் இது குறித்து தேர்தலுக்குப் பின் ஆராயப்படும் என பதிலளித்தார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+