For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோயில் நிலத்தை அபகரித்த முன்னாள் எம்.பி.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கரூரில் கோயில் நிலத்தை தன் பெயரில் பட்டா போட்டுக் கொண்ட, முன்னாள் எம்.பியிடமிருந்து நிலம் மீட்கப்பட்டுள்ளதாகமாநில அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்குடிமகன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சனிக்கிழமையன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் வாசுகி முருகேசன் கேட்டகேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கருரிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 3 ஆயிரத்து 107 ஏக்கர் நிலம் உ ள்ளது. ஆனால்கையிருப்பில் இருப்பது வெறும் 10ஏக்கர் நிலம்தான்.

மீதமுள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, கரூர் முன்னாள்எம்.பி. ஒருவர் கோயில் நிலத்தை தன் பெயருக்கு பட்டா போட்டிருந்தது தெரிய வந்த்து. இது அரசால் ரத்து செய்யப்பட்டது.

கோயில் நிலத்தை தங்கள் பெயரில் பட்டா போட்டுக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்குஅதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுவிட்டனர். நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

கோவில் நிலத்தை சுட்ட முன்னாள் எம்.பி. யார் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X