கடத்தப்பட்ட மீனவர்கள் மீட்பு .. வைகோ நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்டதற்காக, இலங்கைக்கான இந்திய தூதருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சில மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை மீட்டுத் தருமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் வைகோ கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மோகன் காந்தி மூலமாக இந்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கு வைகோ நன்றியும்பாராட்டும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications