அவர்கள் காட்டில்... இவர் வீட்டில்...
சென்னை:
கோபாலை வீட்டிலும் நெடுமாறனை காட்டிலும் காக்க வைத்திருக்கிறார் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
கிளம்பி வருமாறு சிக்னல் வந்ததையடுத்து பழ. நெடுமாறன், புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் 11ம் தேதிகாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், காட்டுக்கு வர கோபாலுக்கு வீரப்பன் சிக்னல் அனுப்பவில்லை.
இதனால், வீரப்பன் கூப்பிடுவார்... கூப்பிடுவார் என்ற அதீத நம்பிக்கையில் சென்னையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறார்கோபால்.
அதே போல வீரப்பன் வரச் சொல்லிவிட்டார் என்று வேகமாகக் கிளம்பிச் சென்ற நெடுமாறன் மற்றும் இருவரையும் காட்டுஎல்லையிலேயே தொடர்ந்து காத்திருக்கச் செய்திருக்கிறார்.
கோபால் மற்றும் நெடுமாறன் இருவருக்கும் இடையே பூசல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. வீரப்பன் கூப்பிட்டஉடன் இந்த இருவருமே தனித்தனியே சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லவும காட்டுப் பகுதியில் இருவரும் சந்தித்துக்கொள்வது எனவும் திட்டமிட்டிருந்தனர். அங்கிருந்து வீரப்பன் ஆளுடன் சேர்ந்து காட்டுக்கச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இவர்கள் போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிட்டது. ஒருவரை சென்னையிலும் ஒருவரை காட்டு எல்லையிலும்காத்திருக்கச் செய்திருக்கிறார் வீரப்பன்.