போலீஸ் உடையில் திருட வந்த 8 பேர் கைது
கோயம்பத்தூர்:
மத்திய ரிசர்வ் போலீஸ் உடையில் கொள்ளையடிக்க வந்த 8 கேரள நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இவர்களிடமிருந்து செல்போன் உட்பட பயங்கர ஆயு தங்களைக் கைப்பற்றினர்.
கோயம்பத்தூர் மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளதால், கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் வர்த்தக தளமாகவிளங்குகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே உள்ள இந்த தொழில் நகரத்தில் நகை வியாபாரம் உட்பட இயந்திரபாகங்கள் விற்பனையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், தங்க நகை வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பல லட்சம் பணத்தை கொள்ளையடிக்க கேரளாவைச் சேர்ந்த சிலவாலிபர்கள் திட்டமிட்டனர். இந்த திட்டம் குறித்து கோயம்பத்தூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன்படி கேரளாவில் இருந்து ஒரு கார் சிவப்பு சுழல் விளக்குப் பொருத்தப்பட்டு பேரூர் நோக்கி வருவதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, பேரூர் பைபாஸ் ரோட்டில் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அப்போது ஒரு கார்மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு மாருதிக் கார் ஆகியவை வந்தன.
ஒரு காரில் சிவப்பு சுழல் விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. இந்த காரில் பயணம் செய்த அனைவரும் சி.ஆர்.பி.எப் போலீஸாரின்உடையில் இருந்தனர். போலீசார் இவர்களிடம் விசாரணை செய்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் பதிலளித்தனர்.மலையாளத்தில் புரியாத வகையில் பதில் கூறியுள்ளனர். இதனால் பேரூர் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
கார் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது காரில் இரும்புக் கம்பிகள், மிளகாய் பொடி ஆகியவை இருந்தன. தகவல்தொடர்பிற்காக செல்போனும் இருந்தது. போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மில்டன் (20), கே.கே உன்னிக்கிருஷ்ணன் (27), டி.என் பிஜு (29), எம்.எம்.முகமது, டி.எஸ் சாஜூ, டி. பி விஜயன், சங்கரன் குட்டி ((48), பைசூ ஆகிய 8 பேரும்கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
போலீஸ் உடையில் கொள்ளையடிக்கும் பயங்கரக் கொள்ளையர்கள் எனவும் தெரிந்தது. போலீசார் இவர்களைக் கைது செய்துஇரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
8 பேரையும் பிடித்த போலீசாருக்கு கோவை கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications