கபில் தேவிடமும் விசாரணை .. மாதவன் முடிவு
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கபில் தேவிடமும், மேட்ச் பிக்ஸிங்புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்நியமித்துள்ள விசாரணை அதிகாரி கே.மாதவன் கூறியுள்ளார்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் விசாரணை நடத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்முடிவு செய்தது. முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் மாதவன் விசாரணை அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை தனது விசாரணையை மாதவன் துவக்கினார். இதுவரை மனோஜ் பிரபாகர்,அஜய் ஜடேஜா, நயன் மோங்கியா, பிசியோதெரபிஸ்ட் அலி இராணி ஆகியோரிடம்விசாரணை முடிந்துள்ளது. முன்னாள் கேப்டன் அஸாருதீன் இதுவரை ஆஜராகவில்லை.
இரண்டு நாட்கள் நடந்த விசாரணை குறித்து மாதவன் கூறுகையில், அஜய் சர்மாவிடம்டெல்லியில் வருகிற 14-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளோம்.
கபில்தேவிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். டெண்டுல்கரிடம் விவாதிக்கவும் எனக்குத்தயக்கமில்லை. தேவைப்பட்டால் அவரை சந்தித்து விளக்கம் கேட்பேன்.
அசாருதீன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். சி.பி.ஐ. விசாரணை அறிக்கையைப்பார்க்காமல் எப்படி விசாரணைக்கு வர முடியும் என்றார். அதற்கு நான் அறிக்கையை தரஏற்பாடு செய்கிறேன் என்றேன். ஆனால் அதற்குப் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை.
கிரிக்கெட் வீரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை 29-ம் தேதிக்குள்கிரிக்கெட் வாரியத்திடம் தரப்படும். கல்கத்தாவில் நடைபெறவுள்ள வாரிய பொதுக்குழுக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைத் தவிர்ப்பது தொடர்பான சில பரிந்துரைகளையும்அறிக்கையில் தரவுள்ளேன். நடுநிலையுடன் கூடியதாக எனது அறிக்கை இருக்கும். வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையாவுடனும் ஆலோசனை நடத்தி சில விளக்கங்களைக்கேட்டுள்ளேன்.
எனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவது குறித்து வாரியம்தான் முடிவு செய்யவேண்டும் என்றார் மாதவன்.