சி.பி.ஐ. சோதனையில் டெல்லி அதிகாரிகளிடம் ரூ. 11 லட்சம் பறிமுதல்
டெல்லி:
டெல்லி வளர்ச்சி ஆணைய வீட்டு வசதிப் பிரிவு ஆணையர் வி.கே சிங்கால் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி துணைத்தலைவரின் தனி உதவியாளர் ஆகியோரின் வங்கி லாக்கர்களைப் பரிசோதனை செய்து ரூ 11.5 லட்சம் பணத்தைக்செவ்வாய்க்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்துள்ளதாகப் பல புகார்கள் வந்தன.இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த நவம்பர் 10 ம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணைய இயக்குநர்கள் 2 பேர்மற்றும் 5 பிற அதிகாரிகள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர்.
டெல்லி வளர்ச்சிக் கழக வீட்டு வசதிப் பிரிவு ஆணையர் சிங்கால், இயக்குநர் சர்மா, துணை இயக்குநர் அகுஜா,அதிகாரிகள் ஜாபிர் செளத்ரி, ஆர்.பி.சர்மா, ஜே.பி.சர்மா, சத்பீர் சிங் மற்றும் டெல்லி வளர்ச்சிக் கழக முன்னாள்ஊழியர் மதன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, வி.கே.சிங்கால் வீட்டிலிருந்து ரூ 3.62 லட்சம் பணமும், 1120 கிராம் தங்கம் மற்றும்வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. இவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ 1.54 லட்சம் கணக்கில் வராத பணம்சிக்கியது.
இதேபோல, பஞ்சாப் தேசிய வங்கியின் பகர்கஞ்ச் பிரிவு துணைத் தலைவருடைய உதவியாளர் அசோக் கபூரின்வங்கி லாக்கரிலிருந்து ரூ 8.08 லட்சம் பணமும், 200 கிராம் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
அவரது வீட்டிலிருந்து ரூ 2.90 லட்சம் பணம், ரூ 6 லட்சத்திற்கான முதலீட்டுப் பத்திரங்கள், டெல்லி, ஷாலிமார் பாக்பகுதியில் 2 பிளாட்டுக்களுக்கான தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன.
ஐ.ஏ.என்.எஸ்.