கவர்னர் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு
சென்னை:
தமிழக கவர்னர் பாத்திமா பீவி பயணம் செய்யவிருந்த விமானத்தில் திடீர் கோளாறுஏற்பட்டது. இதனால் அவர் வேறு விமானத்தில் திருவனந்தபுரம் சென்றார்.
தமிழக கவர்னர் பாத்திமா பீவி கேரளாவில் உள்ள தனது ஊருக்குச் செல்லதிட்டமிட்டிருந்தார். அதற்காக தமிழக அரசுக்கு சொந்தமான செஸ்னா விமானம் மூலம்செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் செல்லவிருந்தார்.
அதன்படி செவ்வாய் கிழமை காலை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றார்.ஆனால் அங்கு அவர் சென்ற பிறகுதான் அந்த விமானத்தில் எந்திரத்தில் கோளாறுஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த விமானத்தில் பயணம் செய்யமுடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
பின்னர் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் காலை 10 மணிக்கு சென்றார் கவர்னர். முன் கூட்டியே கோளாறுகண்டுபிடிக்கப்பட்டதால் நடுவானில் ஏற்படவிருந்த சிக்கல் தவிர்க்கப்பட்டது என்றுபெருமூச்சு விட்டனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications