For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட கட்சிகளுக்கு மாற்று தேவை .. சுவாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 3-வது அணி அமைப்பது குறித்து மூப்பனாருடன் பேசியுள்ளதாக தமிழகஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மீதான நிலக்கரி இறக்குமதி வழக்கில் குறுக்கு விசாரணைக்காக தனிநீதிமன்றத்திற்கு வந்திருந்த சுவாமி குறுக்கு விசாரணைக்குப் பின் நிருபர்களுக்குபேட்டியளித்தார்.

அவர் அளித்த பேட்டி:

இந்த மாநிலத்திற்கு திராவிட கட்சிகளின் ஆட்சியிலிருந்து ஒரு மாற்று ஆட்சி தேவை.எனவே மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி பல அரசியல்கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன்.

உச்ச நீதிமன்றம் வீரப்பன் கூட்டாளிகளை விடுவிக்க முடியாது என் கூறிவிட்டது. இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகள் ஆட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்.

ராஜ்குமார் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என இப்போதுஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் முன்பே இந்த கோரிக்கையைவலியுறுத்தியுள்ளேன்.

பழ.நெடுமாறன் ராஜ்குமாரை விடுவிக்க காட்டிற்குள் செல்வதை குறை சொல்லும்ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட திராவிடர் கழக பொதுச் செயலாளரைப் பற்றி ஒன்றும் சொல்லாமல்இருப்பது ஏன்என கேள்வி எழுப்பினார் சுப்ரமணிய சுவாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X