For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியை மீண்டும் சந்தித்தார் மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதியும், த.மா.கா.தலைவர் மூப்பனாரும் இரண்டாவது முறையாக சந்தித்தனர். 45 நிமிடம் ஆலோசனைநடத்தினர்.

மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இருதய நோய் காரணமாக சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் சென்றுசந்தித்தினர்.

முதல்வர் கருணாநிதி தினமும் காலை, மாலை இரு வேளையும் மருத்துவமனை வந்துமாறனின் உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார். மாறனின் உடல் நிலைமோசமடைந்த நாட்களில் இரவு முழுவதும் மருத்துமனையிலேயே இருந்தார்கருணாநிதி.

அப்போது தகவல் கிடைத்து மூப்பனாரும் மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதியைமாறனின் உடல்நிலை குறித்து கவலையோடு கேட்டறிந்தார். இருவரும் ஒரு மணிநேரம் வரை மருத்துவமனையில் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்போது மாறன் உடல் நலம் தேறியுள்ளது. இந்நிலையில் திங்கள் இரவுமருத்துவமனையில் இருந்த முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் மூப்பனார். இருவரும்மருத்துவமனையில் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் மூப்பனார்கிளம்பினார். அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் அமைச்சர்அன்பழகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X