மலையில் ஒரு திருமணம்
அரிகியூபா (பெரு):
பெரு நாட்டிலுள்ள மிஸ்டி மலையின் உச்சியில் 20 இளஞ் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
அரிகியூபாவின் தெற்குப் பகுதியிலுள்ள 19, 106 அடி உயரமுள்ள மலை மிஸ்டி. ஞாயிற்றுக் கிழமை 20 ஜோடிகள் தங்கள் திருமணத்தை இந்த மலையின் உச்சியில்நடத்தி முடித்தனர். உலகிலேயே மிக உயரமான இடத்தில் நடந்த திருமணமாக இது கருதப்படுகிறது.
வித்தியாசமான இந்த திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹூகோ யுன் கூறுகையில், திருமண ஜோடிகள் மலை உச்சியில் ஏறி தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டனர். அனைத்து இடர்களையும் தாண்டி அவர்கள் மலையில் ஏறியது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆத்மார்த்தமான அன்பை பரிசோதிப்பதுபோன்றதாகும் என்றார்.
திருமண ஜோடிகள் மலை உச்சிக்குச் செல்வதற்காக கடினமான ஷூக்களை அணிந்து சுமார் 12 மணி நேரம் நடந்து உச்சியை அடைந்தனர். அங்கு சென்றதும்,திருமணத்தின்போது அணியும், வெள்ளை உடைக்கு மாறினர். பின்னர், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டு, இனிப்புகளைப்பரிமாரிக் கொண்டனர்.
ஒரு ஜோடியால் மட்டும் மலை உச்சி வரை ஏற முடியவில்லை. இதனால் பாதியிலேயே அவர்கள் திரும்பிச் சென்றனர்.
சாதாரணமாக நடக்கும் திருமணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மலை உச்சியில் நடந்த இந்தத் திருமணம் அவர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாதஅனுபவமாக இருக்கும் என்பது உண்மை.












Click it and Unblock the Notifications