அர்ஜூன ரனதுங்காவின் சகோதரர் சஸ்ண்ெட்
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி தம்மிகா ரனதுங்கா சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கும், வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலாவுக்கும் இடையே, டி.வி.ஒளிபரப்புஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ரனதுங்கா தற்போது கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டுள்ளார்.
தம்மிகா ரனதுங்கா, முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்காவின் அண்ணன் என்பதுகுறிப்பிடத்தக்கது. தம்மிகா மீதான நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை நடந்தவாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இலங்கை அணி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டிகளை டி.வியில் ஒளிபரப்புவதுதொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர்லட்சுமண் கிரியல்லாவிடம் புகார் கூறினார். இதையடுத்து வாரிய விதிமுறைகளைதம்மிகா மீறி விட்டதாக வாரியம் கருத்துத் தெரிவித்தது.
தம்மிகா, பல வருடங்களாக தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.