For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவீரர் தினம்: விடுதலைப் புலிகள் நிதி வசூலிப்பிற்கு எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் கட்டாய நிதி வசூலில் ஈடுபடுவதாககனடாவில் உள்ள இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தோர் சங்கம் புகார் கூறியுள்ளது.

இலங்கை ராணுவத்துடனான மோதலில் இறந்த விடுதலைப் புலிகள் நினைவாகஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை மாவீரர் தினமாக விடுதலைப் புலிகள்அனுசரிக்கின்றனர்.

இந்த ஆண்டு வரவுள்ள மாவீரர் தினத்திற்காக விடுதலைப் புலிகள் கனடாவில் உள்ளபள்ளிகள் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நிதி வசூல் செய்வதாக குடிபெயர்ந்த தமிழர்சங்கம் கூறியுள்ளது.

கனடாவில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துமாறும்அதன் மூலம் வசூலாகும் பணத்தைத் தங்களுக்குக் கொடுக்குமாறும் விடுதலைப்புலிகள்கூறுவதாக இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரும் கூறியுள்ளனர்.

கலை நிகழ்ச்சி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரம்நடப்பதாக பெற்றோர்கள் கருதுவதாக கொழும்புவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா ஐக்கிய இலங்கைக் கழகம் இதுதொடர்பாக வான்கூவர் பள்ளிகள் வாரியத்திற்குகடிதம் எழுதியுள்ளது. விடுதலைப் புலிகள் கலை என்ற பெயரில் பள்ளிகளிலும் ஊடுறுவிவிட்டனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X