For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாறன் உடல்நிலை: நலம் விசாரித்த முதல்வர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வந்த 3 மத்திய அமைச்சர்கள், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர்கள் புதன்கிழமை முதல்வர் கருணாநிதியிடம், அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் மற்றும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் மாறன்குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஒற்றைத் தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு லண்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது, அவர் உடல்நலம் நன்கு தேறி வருகிறார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X