தமிழகம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள்
ஸ்ரீரங்கம்:
தமிழகம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்களைத் துவக்க திட்டமிட்டுள்ளதாக காஞ்சிசங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் முன்பு 108பசுக்களுக்கு புதன்கிழமை பூஜை செய்தார் ஜெயேந்திரர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பசுபாதுகாப்பு சங்கம், இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஜன கல்யாண்ஆகியஅமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சியில் ஜெயேந்திரர் பேசுகையில், பசுக்கள், மகாலட்சுமியின் அடையாளங்கள்.அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
காஞ்சி மடம் சார்பில் அங்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் பசு பாதுகாப்புமையங்கள் உள்ளன. விரைவில் திருச்சியில் இதுபோன்ற மையம் துவக்கப்படும். அதன்பிறகு தமிழகம் முழுவதிலும் இந்த மையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.
இந்த கோமாதா பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கோமாதா பூஜைக்குப் பிறகு திருச்சி ஸ்ரீசங்கரா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சங்கரா ஆயுர்வேத மருத்துவமனையை ஸ்ரீஜெயேந்திரர் திறந்துவைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications