கோவையில் நாளை எஸ்.ஆர்.பி. மணி விழா
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் வியாழக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு மணி விழாநடக்கிறது. இதில் மூப்பனார் உட்பட தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் - பாலாமணியின் மணி விழா கோவையில்நடக்கிறது. இந்த மணி விழா, ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பொதுச் செயலர் பீட்டர் அல்போன்ஸ், விநாயகமூர்த்தி,கோவை மேயர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
சுவாமி தயானந்த சரசுவதி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி ஆகியோர் ஆசி வழங்குகின்றனர். மாலையில்நடக்கும் இந்த விழாவில், மூப்பனார் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications