கட்சித் தொண்டர்கள் மோதலில் 3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், திமுக மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தொண்டர்களிடையே நடந்த மோதலில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர்காயமடைந்தனர்.
சென்னையின் வட பகுதியான பாரிமுனையில் இந்த மோதல் புதன் கிழமை இரவுநடந்துள்ளது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தொண்டர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி படம்வரைந்திருந்த சுவற்றில் வெள்ளையடித்து விட்டு அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டநினைவு தினம் குறித்த வாசகங்களை எழுத முயன்றுள்ளனர்.
இதனால், திமுக தொண்டர்கள் கோபமடைந்தனர். தி.மு.க. தொண்டர்களுக்கும்,முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலைகட்டுப்படுத்த போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மோதலை அடக்கமுயன்றபோது,சப்- இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications