செளத்ரியை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க பிஜி கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சுவா:

பிஜியில் ராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இடைக்கால அரசுசட்டவிரோதமானது, மீண்டும் மகேந்திர சவுத்திரி பிரதமாராக்கப்பட வேண்டும் எனபிஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஜியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திரசவுத்திரி வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டு முடிந்தநிலையில், ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் மகேந்திரசவுத்திரியையும், அவரது அமைச்சர்களையும் நாடாளுமன்றத்தில் சிறை வைத்து,ஆட்சியைப் பிடித்தனர்.

58 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ராணுவம்ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா, அதிபர் கமீசேமாராவையும் பதவி நீக்கம் செய்தார். இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது.

இந்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில், 1997-ம்ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமும் ரத்து செய்யப்பட்டது. தனது நீக்கத்தை எதிர்த்துமகேந்திர சவுத்திரி பிஜி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி டோனிகேட்ஸ் தனது தீர்ப்பில் கூறியதாவது:

இடைக்கால ஆட்சி சட்ட விரோதமானது. 1997-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம்செல்லும். மீண்டும் மகேந்திர சவுத்திரி பிரதமராக்கப்பட வேண்டும்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் கமீசே மாரா மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டும். அப்போதுதான் மகேந்திர சவுத்திரி மீண்டும் பிரதமராக ஆட்சிப்பொறுப்பேற்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக பிஜிரேடியோ அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+