தர்மபுரியில் குடிசை வீடுகளில் மர்மத் தீ
தர்மபுரி :
தர்மபுரி அருகே மர்மத் தீக்குப் பயந்து மக்கள் வீட்டிற்கு வெளியில் படுத்துத் தூங்கி வருகின்றனர்.
நள்ளிரவில் திடீரென குடிசையில் பற்றி எரியும் தீயை அவ்வப்போது அணைக்கின்றனர். இது குறித்து போலீசில் புகார் குறித்தும் நடவடிக்கைஎடுக்காததால், அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.
தர்மபுரி அருகே சின்னத்தோப்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப் பிடித்தது.பொதுமக்கள் ஒன்று கூடி அணைத்தனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை கடந்த 4 நாட்களாக நீடித்து வருகிறது.
ஒவ்வொருவரது வீடாக தினமும் தீப்பிடித்து வருவதால் எந்த வீட்டில் இரவு தீப்பிடிக்குமோ என அஞ்சி அப்பாவி மக்கள், கலக்கமடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் அலட்சியமாக வந்து பார்க்கிறோம் எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் இரவு நேரங்களில் வீட்டிற்குள் படுத்து தூங்க முடியாமல், வீட்டிற்கு காவலாகவும், பாதுகாப்பிற்காகவும் வீட்டிற்கு வெளியில் திண்ணையில்படுத்து தூங்கி வருகின்றனர்.
இந்த மர்மத் தீ தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அறிந்த தாசில்தார் அன்பரசு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications