கடவுளுக்கு நன்றி சொல்வோம்..ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனால் கடத்தப்பட்ட, நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதற்காக கடவுளுக்கு நன்றிசொல்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு கொடுங் குற்றவாளியிடமிருந்து, மதிப்பு மிக்க மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு மாநில அரசுகளும் மண்யிட்டுக் கிடந்தது, இதுவேஇந்தியாவில் கடைசி முறையாக இருக்க வேண்டும்.

கொடியவனின் நிழலில் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் கைகோர்ப்பதும் இத்தோடு முடிவு பெற வேண்டும். ஒரு சந்தன மரத் திருடனால் இந்தியஇறையாண்மைக்கு கேடு இழைக்க முடியும் என்ற கொடிய வரலாற்றை மேலும் தொடர அனுமதிக்கக் கூடாது.

எனவே, நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகு சிறிதும் தாமதப்படுத்தாமல் கொடியவன் வீரப்பனையும், அவனோடு தொடர்புடையவர்களையும்உடனடியாகக் கண்டுபிடிகக் வேண்டும்.

மாநில அரசு இதைச் செய்ய வில்லை என்றால் மத்திய அரசு தலையிட்டு நாட்டின் நன்மைக்காக வீரப்பன் கொட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஐஜி விஜயகுமார் தலைமையில்கூட்டு அதிரடிப் படையினர் மூலம் வீரப்பனைப் பிடிப்பதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

நடிகர் ராஜ்குமார் விடுதலையான நிலையில் தீவிரவாதத்தை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும், வீரப்பன் அட்டகாசத்தை முடிவுக்குக்கொண்டு வரும் வகையிலும், கருணாநிதியால் வீரப்பனுக்குத் தாரை வார்க்கப்பட்ட காட்டுப் பகுதியை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர மத்தியஅரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+