தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி: காளிமுத்து
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்வது உறுதி என்றுஅதிமுக அவைத்தலைவர் காளிமுத்து புதன்கிழமை தெரிவித்தார்.
சங்கரன்கோவில் நகர அதிமுக சார்பில் கழக பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் திருவேங்கடம்சாலையில் நடந்தது.
கூட்டத்தில் அதிமுக அவை தலைவர் காளிமுத்து பேசியதாவது:
தமிழகத்தில் பொதுத்தேர்தல் வருகிறது. ஜெயலலிதா கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.தொண்டர்கள் எழுச்சியுடன் கழகப் பணி ஆற்றி வருகின்றனர். எனவே அவர் கோட்டைக்குப் போவது உறுதி.
இப்போது திமுக வினர் ஜெயலலிதாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி நடத்துகிறார்கள். அந்தஆர்ப்பாட்டம் எதற்கு? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி மீது விசாரணை நடத்துவோம் என்றுசொன்னதற்கா? உங்கள் மீது குற்றம் இல்லை என்று சொன்னால் நீங்கள் எதையும் சந்திக்க தயார் என்று அல்லவாசொல்ல வேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்களைத்தான் எதிர்க்கட்சியினர் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம். இங்கு ஆளும்திமுக, அதிமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? வரும் தேர்தலில் எதிர்கட்சியாகசெயல்பட திமுக ஒத்திகை பார்க்கிறது என்று தான் அர்த்தம் ஆகும்.
மத்தியில் ஆட்சி செய்யும் வாஜ்பாயும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் கருணாநிதியும் மக்களை ஏமாற்றிவருகிறார்கள். அவர்கள் அதிமுக வை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். நிச்சயம் அதிமுக வை அழிக்கமுடியாது. அதிமுக அருகம்புல் போன்றது என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications