சிதம்பரம் கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை
சிதம்பரம்:
பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் சிதம்பரம் அருகே ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுக்கை கிராமத்தில் வசித்து வருபவர் புலவர் ஆறுமுகம்.இவர் செவ்வாய் கிழமையன்று இரவு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்டகும்பல் அவரை, அவரது குடும்பத்தார் கண் முன்னே வெட்டிக் கொன்றது.
போலீஸ் விசாரணையில் தமிழ்வாணன் மற்றும் குமார் என்பவர்கள் தலைமையில்தான் இந்தக் கொலைநடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது கொலை செய்யபப்பட்டுள்ள ஆறுமுகம் இரு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன்கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைக்கு பழி வாங்கும் விதமாக திருவள்ளுவன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கடலூரிலுள்ள புதுச்சத்திரம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.
இதற்கு பழி வாங்கும் விதமாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இந்த கோஷ்டி தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications