வீரப்பனை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் .. வாழப்பாடி
சென்னை:
வீரப்பனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னையில், வாழப்பாடி ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலை தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதுர்யத்துக்கும், சாணக்கியத்துக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும்.
நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சற்றும் எதிர்பாராத இந்த திடீர் திருப்பத்தைமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
அதே நேரம் வீரப்பனை உயிருடனோ அல்லது சுட்டுக் கொன்றோ பிடிக்க வேண்டும் என்று தமிழக-கர்நாடக அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
வீரப்பன் இப்போது விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கி உள்ளார். விடுதலைப் புலிகளின் ஏஜன்டுகளாக செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான தமிழ் தேசியவிடுதலைப்படை போன்ற தீவிரவாத அமைப்புக்களால் அவர் மாவீரனாக சித்தரிக்கப்படுகிற கேவலமான நிலைமையும் ஏற்படலாம்.
வீரப்பனால் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு விட்டதால் இரண்டு அரசுகளும், இத்துடன் பிரச்சனை முடிந்து விட்டது என்ற அலட்சியமாக இருக்காமல்விரைந்து செயல்பட்டு வீரப்பன் உயிருடன் பிடித்து சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்பட வேண்டும்.
இப்போது, வீரப்பன் தனி ஆள் இல்லை. அவரை வழி நடத்திச் செல்லும் தீவிரவாத அமைப்புக்கள் அவருக்குப் பின்னால் இருக்கின்றன என்பதை தமிழகமற்றும் கர்நாடக அரசுகள் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதனை இரு அரசுகளும் சவாலாக ஏற்றுக் கொண்டு, வீரப்பன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இரு அரசுகளும் எடுக்கும்நடவடிக்கைகளுக்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications