ஹெலிகாப்டர் விபத்தில் தொடர்பில்லை .. பாக்.
கராச்சி:
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் காணாமல் போன ஹெலிகாப்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது. பின்னர் ஹெலிகாப்டர்திங்கள்கிழமை பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 12 வீரர்களில் 5 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 7 பேர் காயமடைந்தனர்.
ஹெலிகாப்டர் விழுந்துள்ள இடம் புதர்களும், சகதியும் அதிகமாக இருக்கும் பகுதியாதலால், மீட்புக் குழுவினர் அந்த இடத்தை நெருங்க முடியவில்லை.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என இந்திய விமானப்படை தளபதி டிப்னிஸ் சந்தேகம் தெரிவிந்திருந்தார்.
இந் நிலையில் பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் அப்துல் அஜிஸ் மிர்ஜா நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கும் பாகிஸ்தானுக்கும்எந்து விதமான தொடர்பும் கிடையாது. இந்த விபத்து கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றார்.