அதிமுகவுடன் கூட்டணியா? மறுக்கிறது பாமக

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

திருச்சியில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் 3 வது அணி அமையும் என்று பரவலாக எல்லோரும் பேசி வருகிறார்கள். ஆனால் அது அமையுமா? அமையாதா? என்பது ஜனவரிமாதம் தெரிந்து விடும்.

எந்த அணி அமைந்தாலும் எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. இனி எப்போதும் அதிமுக வுடன் உறவு இல்லை. புதிய நீதிக் கட்சியின் வரவால் எங்கள்கட்சியின் ஓட்டுக்கள் குறையாது. தேர்தலுக்குப் பின்னர் சாதிக் கட்சியின் நிலை என்னவென்று தெரியும்.

அரசு அளிக்கும் நலத்திட்டங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் வீணடிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் விவசாயிகள்வறுமையில் வாழ்கிறார்கள். விவசாயிகள் குடிசையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் அரசு குடியிருப்புக்களில் சுகமாகவாழ்கிறார்கள்.

நோயால் இறந்தவர்களை விட நம் நாட்டில் விபத்தில் இறந்தவர்கள் அதிகம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இந்த விபத்துக்கள் குரித்துபோக்குவரத்து துறை அக்கறை காட்டுவதில்லை.

அதி நவீன முறையில் கண்காணிப்பு கருவிகள் வைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் தொகுதி வாரியாகமாநாடுகள் நடத்தி வருகிறது. 234 வது தொகுதி மாநாட்டை திருச்சியில் நடத்தவிருக்கிறோம் என்றார் டாக்டர் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+