60 லட்சம் வாக்குகளையும் கையால் எண்ண சொல்கிறார் கோர்
புளோரிடா:
புளோரிடாவில் பதிவான 60லட்சம் வாக்குகளையும் கைகளால் எண்ண வேணடும் என இப்போது அல்கோர்கோரிக்கை விடுத்துள்ளர்.
அல்கோரும், ஜார்ஜ் புஷ்சும் சமநிலையில் உள்ள சூழ்நிலையில், புளோரிடாவின் வாக்குகள் தான் வெற்றிதோல்வியை நிர்ணயிக்க உள்ளன.
புளோரிடாவில் 3 கவுண்டிகளில் நடந்து முடிந்த இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் (கைகளால்நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை) புஷ் 300 வாக்குகள் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளார்.
தபால் வாக்குகள்:
வெளிநாடுகளில் வசிக்கும் புளோரிடாவாசிகள் அளித்த தபால் வாக்குகள் அனைத்தும் சனிக்கிழமைக்குள் வந்துசேர்ந்துவிடும். இவை எண்ணப்பட்ட பின்னர் தான் யாருக்கு வெற்றி என்பது தெரியவரும்.
அதே நேரத்தில் மொத்தம் 60 லட்சம் பேர் வாக்களித்ததில் வெறும் 300 வாக்குகள் மட்டுமே புஷ் அதிகம் பெற்றுமுன்னணியில் இருப்பதால் இந்த 60 லட்சம் வாக்குகளையும் கைகளால் எண்ண வேண்டும் என கோர்கோரியுள்ளார்.
தேர்தலில் நடந்த முறைகேடுகள், காணாமல் போன வாக்குச் சீட்டுகள், தவறான வாக்குச் சீட்டால் வந்த பிரச்சனைஎன ஏகப்பட்ட புகார்களை கோர் அள்ளி வீசி வருகிறார். இதையெல்லாம் எதிர்த்து நீதிமன்றத்தில் பலவழக்குகளையும் அவரது கட்சி தாக்கல் செய்துள்ளது.
இந் நிலையில் கைகளால் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியின்வேட்பாளர் ஜார்ஜ் புஷ் ஒப்புக் கொண்டால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அல்கோர் கூறினார்.
இதற்காக புஷ்சை சந்தித்துப் பேசவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
ஆனால், இதை புஷ் ஏற்க மறுத்துவிட்டார். தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் கிடைக்கும் முடிவு தான்இறுதியானது என்றார்.
புளோரிடா முழுவதும் கைகளால் எண்ண கோரிக்கை:
அமெரிக்காவில் தேர்தல் நடந்து முடிந்த 8 நாட்கள் ஆன நிலையிலும் யார் வெற்றி பெற்றது என்பதில் குழப்பம்நீடிக்கிறது. புளோரிடாவில் முதலில் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் புஷ்.ஆனால், அங்கு 3 கவுண்டிகளில் வாக்குகளை கைகளால் எண்ணியபோது கோர் அதிக வாக்குகள் பெற்றார். புஷ்இப்போது வெறும் 300 வாக்குகள் தான் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
இதனால் தான் புளோரிடா முழுவதும் கைகளால் வாக்குகளை எண்ணக் கோருகிறார் அல்கோர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கை எண்ணிக்கையை ஏற்க அதிகாரி மறுப்பு:
இந் நிலையில் 3 கவுண்டிகளில் நடத்தப்பட்ட கைகளால் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவை ஏற்கபுளோரிடா மாகாண உள்துறைதச் செயலாளர் மறுத்துவிட்டார்.
ஏதற்காக இங்கு மறுபடியும் வாக்குகள் எண்ணப்பட்டன என்று இந்த கவுண்டிகளின் தேர்தல் அதிகாரிகள் கொடுத்தவிளக்கம் ஏற்கத்தக்க வகையில் இல்லை.












Click it and Unblock the Notifications